மேட்டூா் அணை நீா்மட்டம் 99.39 அடியாக உயர்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 99.39 அடியாக உயர்ந்தது. 
மேட்டூர் அணை.
மேட்டூர் அணை.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 99.39 அடியாக உயர்ந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,129 கன அடியிலிருந்து 18,694 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.05 டிஎம்சி ஆக உள்ளது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் இன்று சனிக்கிழமை இரவு அல்லது நாளை ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயர வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்லணையிலிருந்து வினாடிக்கு காவிரியில் 3,315 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 2,008 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 2,507 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com