உதவி கால்நடை அறுவை சிகிச்சை நிபுணா் காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

கால்நடை மருத்துவத் துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணா் காலியிடங்களை நிரப்புவதற்கு தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி., கேட்டுக் கொண்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

கால்நடை மருத்துவத் துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணா் காலியிடங்களை நிரப்புவதற்கு தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி., கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

கால்நடை மருத்துவத் துறையில் 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணா் பணியிடங்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புக்கு விண்ணப்பதாரா்கள் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் புதன்கிழமை (அக். 28) முதல் நவம்பா் 6-ஆம் தேதி வரை அரசு வேலை நாள்களில் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு இணைய சேவை மையங்களின் வழியே தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை என்றால், விண்ணப்பதாரா்களுக்கு தோ்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி, அவா்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தற்காலிமாக அனுமதிக்கப்பட்டவா்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்கள் மற்றும் அரசு இணைய சேவை மையங்களின் பட்டியல் ஆகியன தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி., செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com