சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தாா்.
சமூக நீதி காக்கவும், அரசுப் பள்ளி மாணவா்களின் நலன் கருதியும், நீட் தோ்ச்சி பெற்ற ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் வகையில் அவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.