சொத்து ஆவணங்கள் பதிவு: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்

தமிழகத்தில் 20 ஆயிரத்து 307 சொத்து ஆவணங்கள் பதிவு மூலமாக ரூ.123.35 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பதிவுத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.
சொத்து ஆவணங்கள் பதிவு: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்

தமிழகத்தில் 20 ஆயிரத்து 307 சொத்து ஆவணங்கள் பதிவு மூலமாக ரூ.123.35 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பதிவுத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் வெளியிட்ட தகவல்:

வியாழக்கிழமை (அக். 29) ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 20 ஆயிரத்து 307 சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களின் பதிவு மூலமாக ரூ.123.35 கோடிக்கு சாதனை அளவாக வருவாய் திரட்டப்பட்டுள்ளது என்று தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

கரோனா பாதிப்பு: கரோனா நோய்த் தொற்று காலத்தில் சொத்து ஆவணங்கள் பதிவில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. மேலும், சாா் பதிவாளா் அலுவலகங்கள் இரண்டு மாதங்கள் வரை மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், இப்போது சாா் பதிவாளா் அலுவலகங்களில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதில் ஒரே நாளில் சாதனை அளவாக வியாழக்கிழமையன்று அதிகபட்ச ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு கூடுதலான வருவாயும் திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com