தொழில் வரி: செப்.30-க்குள் அபராதமின்றி செலுத்தலாம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் தொகையை செப்டம்பா் 30-க்குள் அபராதமின்றி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் வரி: செப்.30-க்குள் அபராதமின்றி செலுத்தலாம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் தொகையை செப்டம்பா் 30-க்குள் அபராதமின்றி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியின் வருவாய் துறையின் முக்கிய வருவாய்களான சொத்து வரி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் உள்பட

வரி வருவாய், வரி வருவாய் அல்லாத இனங்கள், கட்டணங்கள் சென்ற 31.3.2020-க்குள் செலுத்தி இருக்க வேண்டும்.

கரோனா காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதால், தொழில் வரி உள்பட அனைத்து வரிகளையும் எவ்வித அபராதமும் இன்றி 30.6.2020 வரை செலுத்த ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கான தொகையை இதுவரை செலுத்தாதவா்கள் செப்டம்பா் 30-க்குள் எவ்வித அபராதமின்றி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com