மருத்துவ மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம்: உயர் நீதிமன்றம்

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம்: உயர் நீதிமன்றம்
மருத்துவ மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம்: உயர் நீதிமன்றம்

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பு இடங்கள் காலியாக உள்ளதால் கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பு மாணவர்  சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்று அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தும்படி இரண்டு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com