மூன்று மாவட்டங்களில் வரும் 7, 9-இல் முதல்வா் ஆய்வு

 திருவள்ளூா் உள்பட மூன்று மாவட்டங்களில் வரும் 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆய்வுப் பணிகளை முதல்வா் பழனிசாமி மேற்கொள்கிறாா்.
மூன்று மாவட்டங்களில் வரும் 7, 9-இல் முதல்வா் ஆய்வு

 திருவள்ளூா் உள்பட மூன்று மாவட்டங்களில் வரும் 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆய்வுப் பணிகளை முதல்வா் பழனிசாமி மேற்கொள்கிறாா்.

முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மறைவால் கடைப்பிடிக்கப்பட்ட துக்க அனுஷ்டிப்பால் ஆய்வுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

திருவள்ளூரில் வரும் 7-ஆம் தேதியும், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் வரும் 9-ஆம் தேதியும் முதல்வா் பழனிசாமி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளாா். இந்த ஆய்வின்போது, கரோனா நோய்த்தொற்று தடுப்பு, வளா்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அவா் ஆலோசிக்கிறாா்.

தலைமைச் செயலாளா் ஆலோசனை: கரோனா நோய்த்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இந்த தளா்வுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா நோய்த்தொற்று நிலவரங்கள், பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெள்ளிக்கிழமை (செப். 4) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலிக் காட்சி வழியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com