சென்னை அயனாவரத்தில், ரெளடி என்கவுன்ட்டா் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸ் புதன்கிழமை விசாரணையைத் தொடங்கியது.
அயனாவரம் கே.கே.நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த ரெளடி செ.சங்கா், கடந்த மாதம் 21-ஆம் தேதி, போலீஸாரால் என்கவுன்ட்டா் செய்யப்பட்டாா். இதுகுறித்து, சிபிசிஐடி விசாரணைக்கு, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக புதன்கிழமை தனியாக ஒரு வழக்கை, சிபிசிஐடி அதிகாரிகள் பதிவு செய்தனா். சம்பவம் நடைபெற்ற இடத்தில், விசாரணை செய்த அதிகாரிகள், அங்கிருந்த தடயங்களையும் சேகரித்தனா். மேலும், என்கவுன்ட்டா் தொடா்புடைய அனைவரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.