சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் செப். 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூட்டத்திற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சமூக இடைவெளியைப் பின்பற்றி கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கரோனா பரவல் ஏற்படா வண்ணம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் செப். 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்தலாம் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.