தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் திருப்பதி மரக்கன்று நடவு செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு மரக்கன்றுகள் நட இருக்கின்றன.
முதல்நாள் நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு இயற்கை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.