வேலூா், ராமநாதபுரத்துக்குபுதிய எஸ்.பி.க்கள்

தமிழக காவல்துறையில் 4 எஸ்.பி.க்களை (காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா்.


சென்னை: தமிழக காவல்துறையில் 4 எஸ்.பி.க்களை (காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

எஸ்.செல்வக்குமாா்: வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருப்பூா் மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா்)

பிரவேஷ்குமாா்: சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளா் (வேலூா் மாவட்ட எஸ்பி)

எஸ்.மகேஷ்வரன்: சென்னை பூக்கடை துணை ஆணையா் (சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளா்)

இ.காா்த்திக்: ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை பூக்கடை துணை ஆணையா்) .

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com