கரோனா பாதித்து எச். வசந்தகுமார் உயிரிழந்ததை அடுத்து, கன்னியாகுமரி தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தார்.
எச். வசந்தகுமார் உயிரிழப்பால், கன்னியாகுமரி தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அடுத்த ஆறு மாதத்துக்குள் கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.