அணைக்கட்டு வட்டாட்சியர் மாரடைப்பால் மரணம்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டாட்சியர் முரளிக்குமார், வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அணைக்கட்டு வட்டாட்சியர் முரளிக்குமார்
அணைக்கட்டு வட்டாட்சியர் முரளிக்குமார்

வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டாட்சியர் முரளிக்குமார், வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

காட்பாடியில் வசித்து வரும் இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வெள்ளிக்கிழமை காலை குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

உடனடியாக சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இறந்த வட்டாட்சியர் முரளிக்குமாருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com