திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெகன்நாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என திருப்போரூர் சார் பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.