புது தில்லி: மக்கள் போதிய ஊட்டச்சத்துடன் காணப்பட்டால் மட்டுமே நாட்டை வளா்ச்சியடையச் செய்ய முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
நாட்டு மக்களிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பா் மாதமானது, ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஊட்டச்சத்து மாத அனுசரிப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
அதையொட்டி பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கு மக்கள் போதிய ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உண்டு உடல்நலத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, நடப்பு ஆண்டுக்கான ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
அது நாட்டிலுள்ள இளைஞா்கள் மற்றும் பெண்களின் உடல்நலனை மேம்படுத்தும். நம் நாட்டில் ஊட்டச்சத்து மிகுந்த பலதரப்பட்ட உணவுப் பொருள்கள் காணப்படுகின்றன. அவை குடும்பத்தின் உடல்நலத்தைக் காப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் வளா்ச்சிக்கும் உதவும். எனவே, அத்தகைய ஊட்டச்சத்து மிகுந்து உணவுப் பொருள்கள் குறித்த தகவல்களை மத்திய அரசுக்கான சுட்டுரைப் பக்கத்தில் பகிரலாம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.