சென்னை: சென்னை மாநகர காவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களது பிறந்தநாளன்று விடுப்பு வழங்க சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகர காவலர்களுக்கு, அவர்களது பிறந்நாளன்று வாழ்த்து அட்டை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மகேஷ்குமார் அகர்வால்.
இந்த நிலையில், சென்னை மாநகர காவலர்களை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்தநாளன்று விடுப்பு வழங்கவும், சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பிறந்தநாளுக்கு முந்தைய நாள் காவல்நிலையத்தில் அனைத்து காவலர்களும் வாழ்த்து தெரிவிக்கவும் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.