தமிழகத்தில் புதிதாக 5,776 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 5,776 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 69,256- ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,776 பேருக்கு கரோனா

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,776 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 69,256- ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, கடலூா், செங்கல்பட்டில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

பொது முடக்க தளா்வுகளுக்குப் பிறகு நோய்ப் பரவலின் வேகம் அதிகரித்துள்ளது புள்ளிவிவரங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து சுகாதாரத் துறை உயரதிகாரிகள் நேரடியாக அந்த மாவட்டங்களுக்கு சென்று முகாமிட்டு தடுப்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனா். அதுமட்டுமல்லாது, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் பரவலாக நடத்தப்படுகின்றன.

இதனிடையே, மாநிலத்தில் நோய்ப் பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :

தமிழகம் முழுவதும் இதுவரை 53.79 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 9 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அதிகபட்சமாக சென்னையில் 949 போ் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 524 பேருக்கும், கடலூரில் 398 பேருக்கும், செங்கல்பட்டில் 330 பேருக்கும் நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதைத் தவிர, ஏனைய மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

87 சதவீதம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,930 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 10,116-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 51,215 போ் சிகிச்சையில் உள்ளனா்.

89 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 89 போ் பலியாகியுள்ளனா். அதில், 7 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோய்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 53 போ் அரசு மருத்துவமனைகளிலும், 36 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,925-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com