சென்னை: தமிழகத்தில் தற்போது கரோனா உள்ளிட்ட பல பிரச்னைகள் இருக்கும் போது, தமிழக சட்டப்பேரவையை 3 நாள்களுக்கு மட்டும் நடத்துவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், தமிழக சட்டப்பேரவையை 7 நாள்கள் நடத்த வலியுறுத்தியும், 3 நாள்கள் மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேச மூன்று நாள்கள் போதாது என்று திமுக சார்பில் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையை செப்டம்பர் 14-ம் தேதி முதல் 3 நாள்களுக்கு நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.