புழல் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறு, குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
சென்னை மாதவரம் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகரை ஊராட்சிக்குக் குடிநீர் வசதிக்காக மாவட்ட மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து புழல் ஒன்றிய செயலாளர் நா.ஜெகதீசன் மேற்பார்வையில் புழல் ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கமணி திருமால் தலைமையில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் ஏற்பாட்டின் பேரில் வடகரை சாலை சந்திப்பில் மாவட்ட கவுன்சிலர் மோரை மு.சதீஷ்குமார் வியாழக்கிழமை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதில் வடகரை பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.