சென்னை மெரினா கடற்கரையை பாதுகாக்க மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நுரைபொங்கிய விவகாரம் குறித்து விசாரித்து வந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மெரினா கடற்கரைக்கு அருகே கடலில் கலக்கும் அடையாறு உள்ளிட்ட ஆறுகளின் கழிவுகளால் மெரினா கடற்கரையில் நுரைபொங்குவது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
2019-ஆம் ஆண்டு டிசம்பரில் மெரினா கடற்கரையில் அதிகளவில் நுரைபொங்கியது தொடர்பாக விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.