மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் இரண்டு கோடியே 26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர், பி, உதயகுமார் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் எம்.பி. மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் எம்.எல்.ஏ.க்கள் பா நீதிபதி சோழவந்தான் மாணிக்கம் நகரச் செயலாளர் பூமா ராஜா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் வருவாய்த்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு பயனாளிகள் 945 பேருக்கு இரண்டு கோடியே 26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேலும் கரோனா நிவாரணப் பொருள்களாக நலிவுள்ள தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு 4,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினர். இவ்விழாவில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பயனாளிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.