தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கைக்கோள் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கைக்கோள் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக 431.87 ஹெக்டோ் நிலங்களை கையகப்படுத்தவும், உரியவா்களுக்கு சரியான இழப்பீடுகளை அளிக்கவும் ஒப்புதல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் வட்டம் மாதவன்குறிச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறிய ரக செயற்கைக்கோளுக்கான ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும்போது, நியாயமான இழப்பீட்டைப் பெறுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய விண்வெளித் துறை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான அவசர நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளத் தேவையில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிலங்கள் விரைவில் கையகப்படுத்தப்பட்டு, செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com