சீர்காழியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

சீர்காழியில் ஒன்றிய மற்றும் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 112வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
சீர்காழியில் அண்ணா பிறந்தநாள் விழா
சீர்காழியில் அண்ணா பிறந்தநாள் விழா

சீர்காழியில் ஒன்றிய மற்றும் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 112வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

சீர்காழி அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.நகர செயலாளர் பக்கிரிசாமி, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் நற்குணன், முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி,முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் வா.செல்லையன், நகர ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் விஜிகே.செந்தில்நாதன் பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இதில் எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் திருமாறன், வழக்குரைஞர்கள் பாலாஜி, மணிவண்ணன், நெடுஞ்செழியன், ஊராட்சிமன்ற தலைவர்கள் விஜயன், மதியழகன், மாலினி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரிமா, ஆனந்தி, நகரக் கழக நிர்வாகிகள்  பரணிதரன், எல்விஆர்.வினோத், மலையப்பன், பாலாஜி, மணி, சுரேஷ், இறைஎழில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com