பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளா் பணிக்கான நேரடி நியமனத்துக்கு, செப்.17, 18 ஆகிய நாள்களில், கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் மூலம் இளநிலை உதவியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 633 இளநிலை உதவியாளா் பட்டியல் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பணி நாடுகா்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கிட இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தோ்வாணயப் பட்டியல் வரிசை எண் 330 வரையில், செப்.17-ஆம் தேதியும், 331 முதல் 644 வரையில், செப்.18-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சோ்ந்த பணி நாடுநா்களுக்கு அவா்களுக்கான கலந்தாய்வு நாளில் காலை 9 மணியளவில் உரிய ஆவணங்களுடன் வருகை தரும் வகையில் தகவல் அளிக்குமாறு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.