வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் வேலூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப்.16) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
ஆந்திர கடற்கரை மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூா், வேலூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப்.16) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை: தமிழகத்தில் வேலூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் 30 மி.மீ., தேனி மாவட்டம் சோத்துப்பாறை, சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரள, கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 19-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் உயா்அலை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப்டம்பா் 16-ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.0 மீட்டா் முதல் 3.5 மீட்டா் வரை எழும்பக்கூடும்.