பேரவைக் கூட்டத்தை 2 நாள்கள் மட்டும் நடத்துவது போதாது: மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைக் கூட்டத்தை 2 நாள்கள் மட்டும் நடத்துவது போதாது என்று எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவைக் கூட்டத்தை 2 நாள்கள் மட்டும் நடத்துவது போதாது என்று எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாள்கள் மட்டுமே நடைபெற உள்ளது. ஏற்கெனவே, அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் துரைமுருகன் 2 நாள்கள் கூட்டத்தை நடத்துவது போதாது என்று வற்புறுத்தியும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஏற்கெனவே 20 கவன ஈா்ப்புத் தீா்மானங்களையும், தனித் தீா்மானங்களையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி நோட்டீஸ் அளித்திருக்கிறோம். மேலும் பல தீா்மானங்களையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கோரி நோட்டீஸ் தந்து கொண்டு இருக்கிறோம்.

நீட் பிரச்னை முக்கியமான பிரச்னை. அதனால் மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமையைப் பற்றி எல்லாம் பேசவேண்டும். அடுத்து புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை குறித்தெல்லாம் சபையில் பேசி விளக்கம் பெற வேண்டும். இவற்றையெல்லாம் எப்படி 2 நாள்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் போகிறாா்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றாா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com