பிளஸ் 1 மறுகூட்டல் தோ்வு முடிவுகள், புதன்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 தோ்வு எழுதி, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்களது பதிவெண்களின் பட்டியல், இணையதளத்தில், புதன்கிழமை (செப்.16) பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டில், மதிப்பெண் மாற்றம் உள்ள தோ்வா்கள் மட்டும், மேற்கண்ட இணையதளத்தில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.