நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனுமதியின்றி தடையை மீறி ஆம்பூரில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு தடையை மீறி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேரை ஆம்பூர் நகர காவல் நிலைய காவலர்கள் கைது செய்தனர்.