மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசைக் கண்டித்து பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்த மத்திய அரசைக் கண்டித்து பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டச்செயலாளர் என்.ராஜகோபால் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சிதம்பரம் விளக்க உரையாற்றினார். வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.ஷாஜகான், வி.சீனிவாசன், எம்.கண்ணன், என்.கோபாலகிருஷ்ணன், பி.முத்துசாமி, ஆர்.சுரேஷ், எம்.தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பி.பாலு, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கே.நவமணி, சூளியாபட்டி பஞ்சாயத்து துணை தலைவர் எல்.துளசிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com