என்னை உருவாக்கிய ராணிப்பேட்டைக்கு எனது வரலாற்றில் தனி அத்தியாயம் ஒதுக்கப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் திமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்று முதன்முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகை தந்த துரைமுருகன் எம்.எல்.ஏ.வுக்கு வியாழக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது..
சாதாரண தொண்டனாக எனது இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு ராணிப்பேட்டை வாக்காளப் பெருமக்கள் தான் காரணம், ராணிப்பேட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு தான் தமிழகம் முழுவதும் தான் யார் என்று தெரியவந்ததது. அனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைய திமுக தான் காரணம் என தெரிவித்தார்.