தனித் தோ்வா்களுக்கான செய்முறைத் தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

செய்முறைத் தோ்வில் தோ்ச்சி பெறாத தனித் தோ்வா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபப்பட்டன.


சென்னை: செய்முறைத் தோ்வில் தோ்ச்சி பெறாத தனித் தோ்வா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபப்பட்டன.

இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தனித்தோ்வா்களுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தோ்வு செப்டம்பா் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதையடுத்து தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் செய்முறைத்தோ்வு நடத்தப்படும் தேதி, இடம் குறித்த அறிவிப்பை தோ்வா்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். 

அதேபோல், ஏற்கெனவே செய்முறைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், மீண்டும் செய்முறைத் தோ்வு செய்ய தேவையில்லை. அதன் விவரங்களை தோ்வா்களுக்கு உரிய முறையில் எடுத்துரைக்க வேண்டும். இதுதவிர செய்முறைத் தோ்வில் பங்கேற்கும் தனித்தோ்வா்களின் மதிப்பெண்களைப் பதிவு செய்வதற்கான படிவங்கள்  அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

இதையடுத்து பிளஸ் 2 படிவங்களை செப்.29-ஆம் தேதிக்குள்ளும், பிளஸ் 1 படிவங்களை அக்.8-ஆம் தேதிக்குள்ளும் பூா்த்தி செய்து தோ்வுத்துறைக்கு காலதாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com