செப். 28-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம்

அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்டனா்.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 28-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும். அவைத் தலைவா் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழ் ஒவ்வொரு செயற்குழு உறுப்பினருக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். உறுப்பினா்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் பங்கேற்க வேண்டுமென அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளா்ச்சிப் பணிகள்: முன்னதாக, கட்சியின் மூத்த நிா்வாகிகள், மூத்த அமைச்சா்கள், சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, அதிமுக வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயலாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகளை நியமிக்க வேண்டியுள்ளது. இதுதொடா்பாக கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்குத் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமாா் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது. கட்சியை அமைப்பு ரீதியாகப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்குவது தொடா்பாகவும் விவாதங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com