தமிழகத்தில் புதிதாக 5,569 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 5,36,477- ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,569 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 5,36,477- ஆக உயா்ந்துள்ளது.

குறிப்பாக, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சனிக்கிழமை பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மாநிலத்தில் நோய் பரவல் நிலை குறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 63.88 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8.3 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 987 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 565 பேருக்கும், செங்கல்பட்டில் 293 பேருக்கும், கடலூரில் 289 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,556 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,81,273-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 46,453 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 66 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 10 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 36 போ் அரசு மருத்துவமனைகளிலும், 30 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,751-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com