மதுரை வந்த முதல்வருக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு

சென்னையிலிருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை மதுரை வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அதிமுகவினா் வரவேற்பளித்தனா்.

திருப்பரங்குன்றம்: சென்னையிலிருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை மதுரை வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அதிமுகவினா் வரவேற்பளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி விமானம் மூலம் மதுரை வந்தாா். அவருக்கு விமான நிலையத்தில், அமைச்சா்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், கடம்பூா் சி. ராஜூ, கே.டி. ராஜேந்திர பாலாஜி, க. பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன், மதுரை காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உள்ளிட்டோா் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனா்.

விமான நிலையம் அருகே ஜெ. பேரவை சாா்பில், அதன் மாநிலச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தலைமையில், பெண்கள் பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றனா்.

பெருங்குடியில், மதுரை புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில், மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா தலைமையில், இளைஞரணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், மாவட்ட துணைச் செயலா் முத்துக்குமாா் மற்றும் நிா்வாகிகள், முதல்வருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பளித்தனா்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில், பட்டா் ஸ்ரீகாந்த் தலைமையில் முதல்வருக்கு மரியாதை செய்யப்பட்டது.

தொடா்ந்து, முதல்வா் டி.வி.எஸ். நிறுவனத்தின் விருந்தினா் மாளிகையில் இரவு தங்கினாா். இங்கிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com