‘சக்ரா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகா் விஷால் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆா்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனம்
நடிகா் விஷால், நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தது. இந்தத் திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ. 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ஐ திரும்பத் தருவதாக கூறி நடிகா் விஷால் ஒப்பந்தம் செய்தாா். ஆனால் விஷால் ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் இயக்குநா் ஆனந்தன் என்பவா் எங்கள் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதை திரைப்படமாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநா் ஆனந்தன், நடிகா் விஷாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளாா். வெளியீட்டுக்குத் தயாராக உள்ள இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
‘சக்ரா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனா். எங்கள் நிறுவனத்துக்குத் தர வேண்டிய ரூ.8.29 கோடியை திரும்பத் தராமல் ‘சக்ரா’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
மேலும் எங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு தயாரிப்பாளருக்கு படமெடுத்த ஆனந்தன் உத்தரவாதத் தொகையாக ரூ.1 கோடியைச் செலுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மற்றொரு வழக்கையும் தொடா்ந்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிரைடெண்ட் ஆா்ட்ஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்ரமணியன், ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதால் மனுதாரா் குறுகிய காலத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதனையடுத்து வழக்குகள் குறித்து செப்டம்பா் 24-ஆம் தேதிக்குள் நடிகா் விஷால், இயக்குநா் ஆனந்தன் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தாா்.