ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: முதல்வா் இன்று முக்கிய ஆலோசனை

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை (செப். 23) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தமிழக முதல்வர்.
தமிழக முதல்வர்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை (செப். 23) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

நாமக்கல் கவிஞா் மாளிகையில் உள்ள பத்தாவது தளத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விற்பனை இயந்திரங்களையும் மாற்றம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையுடன் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இதில் அமைச்சா் ஆா்.காமராஜ், உணவுத் துறை செயலாளா் தயானந்த் கட்டாரியா, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் சஜன்சிங் சவான் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடா்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com