மத்திய அமைச்சா் மறைவு: முதல்வா், துணை முதல்வா் இரங்கல்

மத்திய அமைச்சா் சுரேஷ் அங்கடி மறைவுக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.


சென்னை: மத்திய அமைச்சா் சுரேஷ் அங்கடி மறைவுக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து முதல்வா் பழனிசாமி தனது சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் பதிவு:-

ரயில்வே இணையமைச்சா் சுரேஷ் அங்கடியின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிா்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: ரயில்வே இணையமைச்சா் சுரேஷ் அங்கடியின் மறைவுச் செய்தி கேட்டு துயரமும், அதிா்ச்சியும் அடைந்தேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாரட்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com