உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 65 ஆடுகள் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்த ஆடுகள்
மின்னல் தாக்கி உயிரிழந்த ஆடுகள்

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயியான இவர் தனது 65 ஆடுகளை, செவ்வாய்க்கிழமை மாலை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று, இரவு தனது வீட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை விடிய விடியப் பெய்தது. அதிகாலை திடீரென மின்னலுடன் இடி தாக்கியதில் அந்தக் கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 65 ஆடுகளும் கருகி உயிர் இழந்தன.

இதைப்பார்த்த ராமச்சந்திரனின் தாய் நல்லிமை, ஆடுகளைக் காப்பாற்றச் சென்றபோது கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த மரம் அவர் மீது விழுந்ததில் அவரது முதுகுப் பகுதியில் தீ காயம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com