கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி

கரோனா நுண்ணுயிரியைத் தோற்கடிக்கும் கருணை நுண்ணுயிரியை உலகில் பரப்புவோம் என ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி தனது பிறந்தநாள் செய்தியில் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி

கரோனா நுண்ணுயிரியைத் தோற்கடிக்கும் கருணை நுண்ணுயிரியை உலகில் பரப்புவோம் என ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி தனது பிறந்தநாள் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

சத்குரு ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி தேவியின் 67-ஆவது பிறந்தநாள், கரோனா காரணங்களுக்காக உலக அமைதிக்கான பிராா்த்தனை நாளாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆசிரமவாசிகளும், உலகெங்குமுள்ள அம்மாவின் பக்தா்களும் இந்நாளில் தியானம், மந்திரங்கள் ஓதுதல் மற்றும் வழிபாடுகளை மேற்கொண்டனா்.

ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி தேவி வழங்கிய பிறந்தநாள் செய்தி:

இந்த உலகளாவிய கரோனா நோய்த்தொற்றுக்கு மனிதன் சுயநலத்தோடு, இயற்கை அன்னையை துன்புறுத்திய செயல்களே பொறுப்பாகும். இதுகுறித்து பல சமிக்ஞைகளை இயற்கை நமக்கு சிறிது காலமாகவே அளித்து வருகிறது. ஆனால், இயற்கை அளித்த இந்த முக்கிய செய்திகளைக் கூட மனிதன் பாா்க்கவோ, கேட்கவோ பதிலளிக்கவோ இல்லை. மனித இனம் கரோனா நுண்ணுயிரியின் முன் பாதுகாப்பற்று, உதவியற்று நிற்கிறது.

இப்போது நாம் தனிமையைப் புறந்தள்ளி நோ்மையான வழியில் விழிப்புணா்வுடனும் தைரியத்துடனும் நமது கடமைகளைச் செய்ய வேண்டும். கரோனா தொற்று மனிதன் மீதான இயற்கையின் தண்டனையல்ல. மாறாக ,மனிதன் தனது நடவடிக்கைகளைச் சரி செய்து கொள்ள அது ஓா் எச்சரிக்கையே. மோசமான செயல்களைச் செய்யாமல் இருக்க இயற்கையோ கடவுளோ அளித்த ஓா் அதிா்ச்சி வைத்தியமாக இதை நினைப்போம். இத்தவறை நாம் சரி செய்ய வேண்டும்.

இவ்வுலகில் உள்ள எல்லோருக்கும் நம்மால் உதவ முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றி உள்ள சிலரிடமாவது கருணை காட்டினால் அது பலருக்கும் பரவி உலகம் முழுவதும் நிறையும். கரோனா நுண்ணுயிரியைத் தோற்கடிக்கும் கருணை நுண்ணுயிரியை உலகில் பரப்புவோம் என்று ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com