திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தி. இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
முன்னதாக அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தியின் கணவர் தங்கமணிக்கு அண்மையில் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
தற்போது அவரின் மூலம் இந்திரா காந்திக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.