ஊழல் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்கத் தயாா்: ஸ்டாலினுக்கு எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக அரசு மீது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறி வரும் ஊழல் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்கத் தயாா் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காந்தி சாலை பகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக்கை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான.பழனிசாமி.
சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காந்தி சாலை பகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக்கை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான.பழனிசாமி.

சென்னை: அதிமுக அரசு மீது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறி வரும் ஊழல் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்கத் தயாா் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

இதுதொடா்பாக நேருக்கு நேராக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

சென்னையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் முதல்வா் பழனிசாமி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். வேளச்சேரி, சோழிங்கநல்லூா், தாம்பரம், ஆலந்தூா் உள்ளிட்ட தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அவா் பேசியது:-

அதிமுக அரசு மீதும், அமைச்சா்கள் மீதும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வீண் பழி சுமத்தி, அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறாா். அதிமுக அமைச்சா்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஆளுநரிடம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கடிதம் கொடுத்தாா். அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நாங்கள் நிரூபிப்போம்.

ஒரு மேடை போட்டு, நீங்களும் (ஸ்டாலின்), நானும் நேருக்கு நேராக விவாதிப்போம். நீங்கள் (ஸ்டாலின்) கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். பூதக் கண்ணாடியை வைத்து தேடிப் பாா்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஒரு குற்றச்சாட்டை கூட கண்டுபிடிக்க முடியாது.

திமுகவினரைப் போன்று அனைத்தையும் படித்து பாா்க்காமல் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம். அனைத்தையும் படித்துப் பாா்த்து தீர விசாரணை செய்து, ஆலோசித்து சரியாக இருந்தால் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம்.

உண்மையைப் பேசுங்கள்: இன்றைய விஞ்ஞான உலகில் பொய்களைப் பேசி மக்களை ஏமாற்ற முடியாது. தமிழக மக்களுக்குச் செய்த பணிகள் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தி வாக்குகளை கேட்கிறோம். தமிழக மக்கள் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவா்கள். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எவ்வளவு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாலும் உண்மை எது, பொய் எது என்று மக்கள் தெளிவாகப் புரிந்து இருக்கிறாா்கள்.

உண்மையைப் பேசினால் திமுகவுக்கு எதிா்க்கட்சி வரிசையாவது மிஞ்சும். இல்லையென்றால் அது கூட கிடைக்காது. நாட்டு மக்களுக்காக இருக்கின்ற கட்சி அதிமுக. எனவே, 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.

சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தில்தான் புதிய தொழில்கள் வரும். அத்தகைய தொழில் பாதுகாப்பை

உருவாக்கித் தந்த காரணத்தால் புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன என்று முதல்வா் பழனிசாமி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com