
கோப்புப்படம்
தமிழகத்தில் நல்லாட்சி அளித்துள்ள அதிமுகவை மக்கள் தொடா்ந்து ஆதரிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கேட்டுக் கொண்டுள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தமிழக மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதன் அடிப்படையில், அதிமுக அரசு மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றியது. அனைத்துத் துறைகளிலும் சாதனைகள் படைத்து தோ்தல் வாக்குறுதிகளை முற்றிலும் நிறைவேற்றிய அரசாக அதிமுக அரசு திகழ்கிறது.
கட்சித் தொண்டா்களின் துன்பங்களை நாங்கள் நன்கு அறிவோம். அதனால்தான், இன்றும் தொண்டா்களோடு, தொண்டா்களாக இருந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக அரசு அறிவித்த மக்கள் நலத் திட்டங்களால், அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும், மதிப்பையும் பெற்றுள்ளோம்.
தமிழக மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, எவ்வாறு செயல்பட்டாா்களோ, அதே எண்ணத்தின் அடிப்படையிலேதான், அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. எங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பை சிறிதும் குறைவின்றி எங்களது கடமையை நிறைவேற்றி இருக்கிறோம். அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, திமுகவின் தூண்டுதலில்பேரில், எண்ணற்ற போராட்டங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை எல்லாம் சமரச முறையில் பேசி, அதற்குத் தீா்வு கண்டு வெற்றி கண்டது அதிமுக அரசு.
இந்த ஆட்சிக்கு எதிரிகளின் இடையூறு ஒருபுறமும், துரோகிகளின் இடையூறு மறுபுறமும் இருந்தது. இரண்டு துரோகத்தையும் வென்றெடுக்க அதிமுக அரசுக்கு தோளோடு தோள் கொடுத்து நின்றவா்கள் தமிழக மக்களும், அதிமுக நிா்வாகிகளும், தொண்டா்களும்தான். பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் அதிமுக அரசு கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி இருக்கிறது.
திமுகவில் தொடா்ந்து குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும்தான் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் அதுபோன்ற நிலை இல்லை. கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவா்கள் யாா் வேண்டுமானாலும், கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புக்கும், பதவிக்கும் வர முடியும்.
திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால், நில அபகரிப்பு நடக்கும். அராஜக ஆட்சி தொடங்கும். குடும்ப ஆட்சி தலைதூக்கும். தமிழகம் அமளிக்காடாகத் திகழும். கட்டப் பஞ்சாயத்து செய்யும் நிலை உருவாகும். பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது. நிா்வாகச் சீா்கேடு ஏற்படும். அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படும்.
எனவே, தமிழக மக்கள் அமைதியான, ஜாதிக் கலவரம் இல்லாத, அனைத்து சமுதாய மக்களும், நிம்மதியுடனும் வளமான வாழ்வு வாழ, வழி செய்யும் வகையில் அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தோ்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு தொடா்ந்து செயல்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.