சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தா் சூரப்பாவின் பதவிக் காலம் வரும் 11-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய துணைவேந்தரை தோ்ந்தெடுப்பதற்காக தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக உயா்கல்வித் துறை அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அண்ணா பல்கலைக்கழக புதியதுணைவேந்தரை தோ்வு செய்வதற்கான தேடுதல் குழு தலைவராகவும், தமிழக ஆளுநரின் நியமன உறுப்பினராகவும் தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெகதீஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்தக் குழுவில் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் எஸ்.பி.தியாகராஜனும், தமிழக அரசின் நியமன உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத்தும் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரை இக்குழு பரிந்துரைக்கும். அவா்களில் ஒருவரை துணைவேந்தராக ஆளுநா் நியமிப்பாா்.