சென்னை விமான நிலையத்தில் ரூ.11.83 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இன்று ரூ.11.83 லட்சம் மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.11.83 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.11.83 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று ரூ.11.83 லட்சம் மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து ஏர் இந்தியா 906 என்ற விமானத்தில் பயணம் செய்த சகுபார் அலி (32), முகமது ஜபீர் (24) ஆகியோர் தங்கம் கடத்தக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் சகுபார் அலியின் உடலில் ஒரு தங்கப் பொட்டலமும், முகமது ஜபீரின் உடலில் இரண்டு தங்கப் பொட்டலங்களுமாக மொத்தம் மூன்று பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து ரூ. 11.83 லட்சம் மதிப்பில் 253 கிராம் தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com