கெரகோட அள்ளியில் வாக்கைப் பதிவு செய்யும் அமைச்சர் கே.பி.அன்பழகன்
கெரகோட அள்ளியில் வாக்கைப் பதிவு செய்யும் அமைச்சர் கே.பி.அன்பழகன்

தருமபுரி: அமைச்சர் கே.பி.அன்பழகன், எம்.பி.செந்தில்குமார் வாக்களித்தனர்

தருமபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

தருமபுரி: தருமபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோட அள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதேபோல தருமபுரி விஜய் வித்யாலயா பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதேபோல தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தடங்கம் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.கே.முருகன், பாலக்கோடு அருகே பாவளி கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

இதேபோல பென்னாகரத்தில் தொகுதியில் போட்டியிடும் பாமக மாநிலத் தலைநகர் ஜி.கே.மணி, பென்னாகரம் அருகே அஜ்ஜன அள்ளியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

பென்னாகரம் தொகுதி திமுக வேட்பாளர் பிஎன்பி இன்பசேகரன் எம்எல்ஏ குள்ளாத்திரம்பட்டி வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா ஏ.ஜெட்டிஅள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com