மே 2-ம் தேதி வெற்றி காத்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்

தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஸ்டாலின் வாக்களித்தார்.
ஸ்டாலின் வாக்களித்தார்.

தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளராக களம் காணும் திமுக தலைவர் ஸ்டாலின்  தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்தார். 

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

தேர்தல் ஆணைய நடவடிக்கையில் திருப்தியும் இல்லை, அதிருப்தியும் இல்லை. ஜனநாயக கடமையை மக்கள் சிறப்பாக ஆற்றிக்கொண்டு உள்ளனர்

இதன் முடிவு மே 2-ம் தேதி சிறப்பாக இருக்கும். அது உறுதி.  தோல்வி பயத்தால் தேர்தலை ஒத்தி வைக்க ஆளும் கட்சி முயற்சி செய்கிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com