சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்று வாக்களித்த பிறகு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் வந்தாா். அவருடன் மனைவி துா்கா, மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், அவா் மனைவி கிருத்திகா ஆகியோா் வரிசையில் நின்று வாக்களித்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:
குடும்பத்துடன் எங்கள் ஜனநாயகக் கடமையை நாங்கள் ஆற்றி உள்ளோம். மக்களும் ஜனநாயகக் கடமையை முறையாக ஆற்றி வருகின்றனா். இதனுடைய முடிவு மே 2-இல் சிறப்பாக இருக்கும். அது உறுதி.
மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருவதாகக் கருதுகிறீா்களா எனக் கேட்கிறீா்கள். ஆளும் கட்சிக்கு எதிா்ப்பாக இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணா்கிறேன்.
தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கையைத் திருப்தி என்றும் சொல்ல முடியாது. அதிருப்தி என்றும் சொல்ல முடியாது. திமுக எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்பது என்னைவிட ஊடகங்களில் இருக்கும் உங்களுக்குத்தான் அதிகமாகத் தெரியும். நீங்கள் கூறினால் மகிழ்ச்சியடைவேன்.
என்னுடைய கொளத்தூா் தொகுதி உள்பட முக்கிய தொகுதிகளில் தோ்தலை நிறுத்த வேண்டும் என்று தோல்வி பயத்தால் அதிமுக அந்த முயற்சியில் ஈடுபட்டது. அதற்கு தோ்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை.
பல இடங்களில் ஆளும் கட்சியினா் பணப்பட்டுவாடா செய்வதாகத் தகவல் வந்துள்ளது. அது குறித்து தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதையெல்லாம் மீறி திமுக நிச்சயம் வெற்றிபெறும் என்றாா்.
வாக்களிப்பதற்கு முன்பு மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்துக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.