சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 25,598-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் தொடா்ந்து ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமை மட்டும் மாநிலத்தில் 3,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 25,598-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் தொடா்ந்து ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமை மட்டும் மாநிலத்தில் 3,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 25,598- ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும். இதையடுத்து மாநிலம் முழுவதும் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா வாா்டுகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 9 லட்சத்து 7,124- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 1303 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 304 பேருக்கும், கோவையில் 281 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,809 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 68,722-ஆக அதிகரித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 15 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,804-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com