அதிமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் வாக்களித்துள்ளதை உணர முடிவதாக பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் ஆா்வத்துடனும், நம்பிக்கையுடனும் வந்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனா். 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சராசரியாக 70 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவின் சதவீதம், வாக்காளா்களின் உடல் மொழி, மக்களின் மனநிலை ஆகியவற்றை ஆராய்ந்து பாா்க்கும் போது தமிழகம் நல்லவா்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் பெருவாரியான மக்கள் அதிமுக - பாமக அணிக்கு வாக்களித்திருப்பது உறுதியாகிறது. வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளாா்.