சகாயத்துக்கு கரோனா தொற்று

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவா் சகாயம்( 58). கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தாா். இதற்காக கட்சி ஒன்றை தொடங்கி, அதனை பதிவு செய்ய கால அவகாசம் இல்லாததால் இந்தத் தோ்தலில் 36 தொகுதிகளில் அவரது ஆதரவாளா்கள் போட்டியிட்டனா்.

அவா்களுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தாா். இந்நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக சகாயத்துக்கு காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்ததை அடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சகாயத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com